பாரதியாரின் - பாரத ஜனங்களின் தற்கால நிலைமை..!
பாரதியாரின் - பாரத ஜனங்களின் தற்கால நிலைமை..!
கல்லூரி முதலாம் ஆண்டு தமிழ் அலகு 1
tamil exam notes,
பாரதியார்..!
★ அடிமைத் தலையில் சிக்குண்டு உறங்கிக் கிடந்த தமிழகத்தைத் தம் பாட்டு திறத்தால் எழுப்பி எழுச்சியுறச் செய்தவர் மகாகவிபாரதியார்.
★ சுப்பீரமணிய பாரதியார் 11.12.1882-இல் எட்டையபுரத்தில் சின்னசாமி அய்யருக்கும், இலக்குமியம்மையாக்கும் மகனாகப் பிறந்தார்.
★ நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்ற இவர், பதினோராம் வயதிலேயே சமஎஸ்தானப் புனைர்களால் பாரதி என்னும் பட்டம் சூட்டப்பெற்றுனர்.
★ செல்லம்மாள் இனர்தம் துணைனி ஆனார்.
★ சுதந்திர வேட்கையினைப் பாரதத்திலும், குறிப்பாகத் தமிழகத்திலும் ஊட்டிய பாரதியார் இவருடைய சோதிமிக்க நவகவிதைகள் சுவை புதிது, பொருள் புதிது. வளாம்: புதிது, சொல் புதிது என்று திகழ்பனையாகும்.
★ பாரதியாரின் சாண்ணன்பாட்டு இறைபுணர்வோடு காதலுணர்னையும் கட்டுவன.
★ பாஞ்சாலி சபதம் அறத்தின் வெற்றியையும், பெண்ணினத்தின் சீர்மையை விளக்குவதாகும்.
★ குயில்பாட்டு இயற்கையின் பேரெழிலை விளக்குவதோடு தத்துவக் கருத்துக்களையும் எடுத்தியம்புவதாகும்.
★ பாரதியார் வருவதுணரும் பேரறினாளர்; 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலூர் வாழ்ந்த அவர், இன்றைய அறிவியல் வளர்ச்சியினை அன்றே இயம்பினார்.
★ உலக உயிர்களிலெல்லாம் இறைவனைக் கண்ட பாரதியார், சாதி சமய வழக்குகளை வெறுத்தவர்.
★ பாரதிப்பெருமகனார் 12.09.1921ல் இயற்கை எய்தினார்.
★"அறிவே தெய்வம்" என்றும், 'சுத்த அறிவே சிவம்" என்றும் போற்றிய பாரதியார் தமிழ் வாழும்வரை வாழ்வார்.
★ பாரதியார் கவிதைகளில் "பாரத ஜனங்களின் தற்கால நிலை" என்னும் தலைப்பில் அமைந்த பாடல் பாடப்பகுதியாகும்.
பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
(நொண்டிச் சிந்து)
1. நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே:
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்:
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப்பயப்படுவார்
(நெஞ்சு)
2. மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்
யந்திர சூனியங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார்
(நெஞ்சு)
3. சீப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன்
வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந்தெழுந்து நிற்பார்;
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.
(நெஞ்சு)
4. நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?
ஆறுதலை யென்று மகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடு வார் -பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்
(நெஞ்சு)
5.சாத்திரங்கள் ஒன்றும் காணர்- பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரித்தவனைக் குலைத்திகழ் வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்று பெருஞ்சண்டையிடுவார்.
6. நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே;
கஞ்சி குடிப்பதற்கு கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
(நெஞ்சு)
7. எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற.
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
(நெஞ்சு)
Comments
Post a Comment